×

டி.களத்தூரில் குட்டையில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி சாவு

பாடாலூர், ஏப். 30: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் மதியழகன் (45). மாற்றுத்திறனாளி. இவர் பெரும்பாலான நேரங்களில் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருப்பார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் நீரில் மூழ்கி இறந்து விட்டார். தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர் மதியழகன் உடலை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாடாலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டி.களத்தூரில் குட்டையில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி சாவு appeared first on Dinakaran.

Tags : D. Kalathur ,Badalur ,Angamuthu ,Mathiyalagan ,Aladhur taluka ,Perambalur district ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்: கலெக்டர் அதிரடி உத்தரவு